15/03/2019
நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/XOqGPp
தமிழக சிறுவனுக்கு 7 கோடி ரூபாய் பரிசு... - முக்கிய செய்திகள் !
தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள் - 2019
இன்று முதல் மாலை 6.00 மணிக்கு வர இருக்கும் தமிழ் புத்தாண்டு ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் எத்தகைய மாற்றத்தை தரப்போகிறது என்பதை மிகத்தெளிவாகவும் விரிவாகவும் பார்க்கலாம். இணையதள வசதியுடன் காத்திருங்கள்!!
காலை நேரச் செய்திகள்
மார்ச் 15
உலகச் செய்திகள்
ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக இருந்துவந்த க்ரிஸ் காக்ஸ் அந்தப் பதவியிலிருந்து திடீரென விலகியுள்ளார்.
அமெரிக்காவில் தி வோர்ல்ட்ஸ் பெஸ்ட் என்ற பெயரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பியானோ வாசித்து வெற்றி பெற்ற தமிழக சிறுவனுக்கு ஏழு கோடி ரூபாய் பரிசு கிடைத்துள்ளது.
அமெரிக்காவின் கொலரடோ மாகாணத்தில் வீசிய கடும் சூறாவளி, பனிப்பொழிவு காரணமாக 1339 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இங்கு பலத்த காற்றுடன் பனிப்பொழிவும் ஏற்பட்டதால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.
மாநிலச் செய்திகள்
மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள், சுமார் 10 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர்.
மக்களவைத் தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரத்தின் 50 சதவீத ஒப்புகைச் சீட்டுகளை சரிபார்க்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் விடுத்த கோரிக்கையை உச்சநீதிமன்ற அமர்வு இன்று விசாரிக்க உள்ளது.
டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையில் மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் நஷ்டத்தில் இயங்கும்
தமிழக அரசு சார்பில் நீட் மற்றும் துநுநு பயிற்சி மையங்கள் மார்ச் 25 முதல் நடைபெற உள்ளது. 413 மையங்களில் நீட் பயிற்சி பெறுவதற்காக 20,000 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். அவர்களில் 4,000 பேருக்கு தங்குமிடம், உணவு ஆகியவை இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ஆயுள் காப்பீட்டுத்துறை நிறுவனங்களின் புதிய பிரீமியம் வருவாய் பிப்ரவரி மாதத்தில் 32.7 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளது.
வீர சாகசம் புரிந்தவர்களுக்கும், நாட்டைக் காக்கும் கடமையில் உயிர்த்தியாகம் செய்தவர்களின் குடும்பத்தினருக்கும் கீர்த்தி சக்ரா மற்றும் சவுரயா சக்ரா போன்ற விருதுகள் நேற்று டெல்லியில் வழங்கப்பட்டன.
மாவட்டச் செய்திகள்
கச்சத்தீவு புனித அந்தோணியார் கோவில் திருவிழாவை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் இருந்து ஆயிரக்கணக்கானோர் படகுகள் மூலம் பயணத்தைத் தொடங்கினர்.
பொள்ளாச்சியை தொடர்ந்து உடுமலைபேட்டையிலும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சியில் மாணவர்கள் போராட்டத்தை அடுத்து 2வது நாளாக கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டுச் செய்திகள்
யூரோ சாம்பியன்ஸ் லீக் 2வது லெக்கில் லியோன் அணியை 5-1 என வீழ்த்தி பார்சிலோனா காலிறுதிக்கு முன்னேறியது.
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு உடற்தகுதி பெற்றுவிட்டார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணியில் சுரங்கா லக்மல், வாண்டர்சே ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மேலும் பல செய்தித் துளிகள் நமது நித்ரா நாட்காட்டியில் முதல் பக்கத்தில் உள்ள செய்திகள் என்னும் பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது...
தமிழில் மிகச்சிறந்த நாட்காட்டியான நித்ரா நாட்காட்டியை இலவசமாக உங்கள் ஆன்ட்ராய்டு மொபைலில் தரவிறக்கம் செய்துகொள்ள கீழ்கண்ட லிங்க் -ஐ கிளிக் செய்யுங்கள் https://goo.gl/XOqGPp